டயர் வெடித்ததால் தறிகெட்டு ஓடியது லாரி மீது கார் மோதி தாய், குழந்தை பலி மும்பையை சேர்ந்தவர்கள்

டயர் வெடித்ததால் நிலைதடுமாறிய கார் லாரி மீது மோதிய விபத்தில் தாய், குழந்தை பலியாகினர். இவர்கள் மும்பையை சேர்ந்தவர்கள்.
டயர் வெடித்ததால் தறிகெட்டு ஓடியது லாரி மீது கார் மோதி தாய், குழந்தை பலி மும்பையை சேர்ந்தவர்கள்
Published on

வசாய்,

மும்பை மாகிம் ஹாஜி இஸ்மாயில் சால் பகுதியை சேர்ந்த பெண் நாஷ்நின் சேக் (வயது37). இவர் குஜராத் மாநிலம் வாபியில் உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ள தனது ஒரு வயது குழந்தை முசேக் சேக்குடன் காரில் புறப்பட்டு சென்றார். இந்த காரில் அவர் உள்பட சிலர் பயணம் செய்தனர்.

இந்த காரை ஆயன் சேக் என்பவர் ஓட்டி வந்தார். பால்கர் மாவட்டம் தானோரி கிராமம் அருகே மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் கார் சென்ற போது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி லாரி மீது மோதி

இந்த விபத்தில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் நாஷ்நின் சேக், மற்றும் அவரது ஒரு வயது குழந்தை முசேன் சேக் ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் காரில் இருந்த டிரைவர் உள்பட 5 பேர் மற்றும் சாலையை கடக்க முயன்ற பிரசாந்த் என்பவர் என 6 பேர் படுகாயமடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான தாய், மகனின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com