நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி அம்பத்தூரில் கைது

நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி அம்பத்தூரில் கைது செய்தனர்.
நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி அம்பத்தூரில் கைது
Published on

திரு.வி.க. நகர்,

நெல்லை அருகே உள்ள சுரண்டையை சேர்ந்தவர் கோழி அருள். பிரபல ரவுடியான இவர் மீது 7 கொலை வழக்கு உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர், சமீபத்தில் தமிழக டி.ஜி.பி.க்கு சவால் விடும் வகையில் வெளியிட்ட ஆடியோ வைரலானது. மேலும் பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த இவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று இரவு அம்பத்தூர் எஸ்டேட் அருகே பதுங்கி இருந்த ரவுடி கோழி அருளை நெல்லை மற்றும் அம்பத்தூர் தனிப்படை போலீசார் இணைந்து கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com