12 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது - கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதினை ராமநாதபுரத்தில் நடைபெற்ற விழாவில் கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்.
12 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது - கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக நடைபெற்ற விழாவில் கலெக்டர் வீரராகவராவ் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 12 ஆசிரியர்களுக்கு 2020-ம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து விழாவில் கலெக்டர் வீரராகவராவ் பேசியதாவது:- மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்களிடமே அதிக நேரம் செலவிடுகின்றனர். குழந்தைகளின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 12 ஆசிரியர்களுக்கு 2020-ஆம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதானது ஒவ்வொரு ஆசியர்களின் கனவு விருதாகும். நடப்பாண்டில் இவ்விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், நவாஸ்கனி எம்.பி., மணிகண்டன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சித் தலைவர் திசைவீரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மண்டபம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் திருமதி கல்பனாத்ராய், மாவட்ட கல்வி அலுவலர்கள் முத்துச்சாமி, கருணாநிதி, முருகம்மாள் உள்பட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com