இடத்தகராறில் இருதரப்பினர் மோதல்; பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

இடத்தகராறில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இதில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இடத்தகராறில் இருதரப்பினர் மோதல்; பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
Published on

கீரனூர்:

கீரனூரை அடுத்துள்ள ராக்கதாம்பட்டியை சேர்ந்தவர்கள் பாஸ்கர், திவ்யநாதன்(வயது 50). இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் ஆயுதங்களாலும், கம்புகளாலும் தாக்கிக்கொண்டனர். இதில் பாஸ்கரின் மனைவி புஷ்பலீலாவுக்கு(27) தலையில் அரிவாள் வெட்டு விழுந்ததில் படுகாயமடைந்தார். இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கப்பட்டதில் திவ்யநாதனுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் அளித்த புகார்களின்பேரில் திவ்யநாதன், அவரது மகன் சுதாகர், தினேஷ், இளம்பருதி ஆகியோர் மீதும், மற்றொரு தரப்பை சேர்ந்த பாஸ்கர், அவரது மனைவி புஷ்பலீலா, திரவியம், மகிமை ஆகியோர் மீதும் உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com