பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோட்டில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம் நடத்தியது.
பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
Published on

எலச்சிபாளையம்:

பா.ஜனதா நிர்வாகி விஸ்வநாதன் தாக்கப்பட்டதை கண்டித்து திருச்செங்கோட்டில் பா.ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில துணைத்தலைவர் வி.பி.துரசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். பொருளாளர் மகேஸ்வரன், மாநில நெசவாளர் அணி தலைவர் பாலமுருகன், தெற்கு ஒன்றிய செயலாளர் சசிதேவி, மாவட்ட பிரசார பிரிவு தலைவர் ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் நாகராஜன், மாவட்ட பொது செயலாளர்கள் முத்துகுமார், நாகராஜன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் தினேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com