சாலை அமைக்காததை கண்டித்து பாய், தலையணையுடன் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் காத்திருந்த பொதுமக்கள்

சாலை அமைக்காததை கண்டித்து பாய், தலையணையுடன் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை அமைக்காததை கண்டித்து பாய், தலையணையுடன் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் காத்திருந்த பொதுமக்கள்
Published on

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் 1-வது வார்டுக்கு உட்பட்ட பாவேந்தர் தெரு, பாரதிதாசன் தெரு மற்றும் ராஜம்மாள் தெரு போன்ற பகுதிகளில் புதிதாக சிமெண்டு சாலை அமைக்க ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட ரூ.6 லட்சம் நிதி எங்கே? என கேள்வி கேட்டும், நிதி ஒதுக்கி 6 மாதங்களாகியும் இன்னும் பணிகள் தொடங்கப்படாததை கண்டித்தும் அந்த பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பாய், தலையணையுடன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com