சிறுவன், தூக்குப்போட்டு தற்கொலை

கடலூர் சீர் திருத்த பள்ளியில் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன், தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கடலூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள எடுத்தவாய்நத்தம் பகுதியை சேர்ந்தவன் 17 வயது சிறுவன். இவன் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 23-ந்தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இது பற்றி சிறுமியின் பெற்றோர், சின்னசேலம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவனை கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுவர் சீர்திருத்த பள்ளியிலேயே அந்த சிறுவன், போர்வையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவர் சீர்திருத்த பள்ளி காவலாளி, உடனே இது பற்றி கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய சிறுவனின் உடலை பார்வையிட்டு, அங்கிருந்த வர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

தொடர்ந்து சிறுவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com