வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரை சேந்தவர் சுசீலா (வயது 61). இவர், அரசு வங்கியில் காசாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வந்தவாசியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றுவிட்டார்.
வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு
Published on

நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 30 பவுன் நகை, ரூ.2 லட்சம் மற்றும் வீட்டில் இருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர். அப்போது ஐந்து ரூபாய் நோட்டு கட்டுகளை வீட்டு வாசலிலேயே போட்டு சென்றுவிட்டனர். இதேபோல் புதுபெருங்களத்தூர் சீனிவாசன் நகர், கண்ணகி தெருவைச் சேர்ந்த ஆராவமுதன் (50) என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், ரூ.3 ஆயிரம் மற்றும் மடிக்கணியை திருடிச்சென்று விட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com