குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலையை சரிசெய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
Published on

நச்சலூர்

கரூர் மாவட்டம், பொய்யாமணியில் இருந்து திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலைக்கு செல்லும் தார்சாலை பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது அந்த வழியாக ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த தார்சாலையில் ஜல்லிக்கற்கள் பெயந்து குண்டு, குழியுமாக பல வருடங்களாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டு வருகின்றனர். இதனால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com