சுங்குவார்சத்திரம் அருகே கார்- மோட்டார்சைக்கிள் மோதல்; ஒருவர் சாவு

சுங்குவார்சத்திரம் அருகே கார்-மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
சுங்குவார்சத்திரம் அருகே கார்- மோட்டார்சைக்கிள் மோதல்; ஒருவர் சாவு
Published on

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த பொடவூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 42). இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் பெருமாள் என்பவருடன் தனது மோட்டர் சைக்கிளில் சுங்குவார்சத்திரம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

அப்போது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாந்தவேலூர் என்னும் இடத்தில் சாலையை கடக்க நின்ற போது சென்னை நோக்கி வேகமாக வந்த சொகுசு கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

மேலும் அங்கு சாலையை கடக்க நின்று கொண்டிருந்த நந்திமேடு பகுதியை சேர்ந்த கணேசன் (45), சேகர் (40) ஆகியோர் மீதும் மோதிவிட்டு அந்த கார் நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைத்த கருணாகரன் உள்பட 4 பேரும் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருணாகரன் பரிதாபமாக பலியானார்.

சேகர் மேல் சிகிச்சைக்காகக் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com