

திருவெறும்பூர்,மே.1-
திருவெறும்பூர் போலீசார் கீழவிளாங்குளம் கல்லணை கால்வாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கோட்ரப்பட்டியை சேர்ந்த ஜான் பாஸ்கர், வாழவந்தான் கோட்டையை சேர்ந்த ஜான்சன், வல்லப ராஜ், தீனா ஆகியோர் மொபட்டுகளில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மொபட்டுகளையும், 10 மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.