மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்கு

மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்கு.
மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்கு
Published on

செங்குன்றம்,

மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் சோழவரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட பெரம்பூரை சேர்ந்த சூர்யா (வயது 21), காசிமேட்டை சேர்ந்த ஜெயக்குமார் (24), அரவிந்தன் (19), திருமலை (20), பொன்னேரியை சேர்ந்த ரவி (23), கொருக்குப்பேட்டையை சேர்ந்த மோகன்குமார் (19), செங்குன்றத்தை சேர்ந்த கணேஷ் (19) உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து 9 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com