பகவதி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

பகவதி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
பகவதி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
Published on

தோகைமலை,

தோகைமலையில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூச்சொரிதல் விழாவையொட்டி திரளான பெண்கள் மேளதாளம் முழங்க பூத்தட்டை ஊர்வலமாக முக்கிய வீதிகளில் வந்தனர். பின்னர் பகவதி அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதையடுத்து, 15-ந் தேதி பால்குட ஊர்வலம், தீச்சட்டி எடுத்தல், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 16-ந் தேதி கருப்பர் கோவிலில் கிடா வெட்டுதலும், 17-ந் தேதி மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவடைகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com