2 குழந்தைகளின் தாயுடன் ஓட்டம்: தாக்கப்பட்ட கள்ளக்காதலன் சிகிச்சை பலனின்றி சாவு; கொலை வழக்காக மாற்றம்

2 குழந்தைகளின் தாயுடன் ஓட்டம் பிடித்ததால் திருச்சியில் தாக்குதலுக்குள்ளான கள்ளக்காதலன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.
2 குழந்தைகளின் தாயுடன் ஓட்டம்: தாக்கப்பட்ட கள்ளக்காதலன் சிகிச்சை பலனின்றி சாவு; கொலை வழக்காக மாற்றம்
Published on

திருச்சி,

2 குழந்தைகளின் தாயுடன் ஓட்டம் பிடித்ததால் திருச்சியில் தாக்குதலுக்குள்ளான கள்ளக்காதலன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இந்த வழக்கு கொலை வழக் காக மாற்றம் செய்யப்பட் டது.

கள்ளக்காதல்

ராமநாதபுரம் மாவட்டம் மனுச்சியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியேந்திரன் (வயது 30). இவருடைய மனைவி வளர்மதி (24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சத்தியேந்திரன் திருச்சி சின்னக்கடைவீதியில் ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

அவ்வப்போது ஊருக்கு சென்று மனைவியையும், குழந்தைகளையும் பார்த்து வருவது வழக்கம். கடந்த ஜனவரி மாதம் வீட்டில் இருந்த வளர்மதி திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

விசாரணையில், வளர்மதிக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த வேல்ராஜ் (20) என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு, இருவரும் ஊரை விட்டு ஓடியதும், திருச்சி தாராநல்லூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சம்பவத்தன்று இரவு காரில் அங்கு சென்ற சத்தியேந்திரன் உள்ளிட்ட கும்பல் வேல்ராஜை சரமாரியாக தாக்கி வளர்மதியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி தப்பி சென்றனர்.

கொலை வழக்காக மாற்றம்

இதில் படுகாயம் அடைந்த வேல்ராஜை போலீசார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தசம்பவம் குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சத்தியேந்திரன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.

இதற்கிடையே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேல்ராஜ் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த காந்திமார்க்கெட் போலீசார், மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com