சென்னை குடிநீர் ஏரிகளில் 72 சதவீதம் தண்ணீர் இருப்பு

சென்னை குடிநீர் ஏரிகளில் 72 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.
சென்னை குடிநீர் ஏரிகளில் 72 சதவீதம் தண்ணீர் இருப்பு
Published on

72 சதவீதம் தண்ணீர்

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த ஐந்து ஏரிகளிலும் மொத்தம் 11.757 டி.எம்.சி. தண்ணீர் சேர்த்து வைக்கலாம். தற்போதைய நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் 8.640 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. இது ஏரிகள் மொத்த கொள்ளளவில் 72 சதவீதமாகும். தற்போது கோடைகாலம் தொடங்கியிருந்தாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்வதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

வழக்கத்தைவிட கூடுதலாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சராசரியாக ஒரு மாதத்திற்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும்.

8 மாதங்களுக்கு தண்ணீர்

தற்போது ஏரிகளில் 8.640 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளதால் இன்னும் 8 மாதத்துக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும். மேலும், அடுத்த மாதம் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி, கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எனவே, தற்போது ஏரிகளில் உள்ள தண்ணீரை வைத்து இந்த ஆண்டு முழுவதும் சென்னையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி. ஆகும். இதில் 1.874 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

புழல் ஏரியில் 2.890 டி.எம்.சி. தண்ணீர், சோழவரம் ஏரியில் 341 டி.எம்.சி. தண்ணீர், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2.583 டி.எம்.சி. தண்ணீர், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 500 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com