சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சென்னை மருத்துவ குழுவினர் விசாரணை

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் விற்பனை செய்யப்பட்டதா? என்பது குறித்து சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சென்னை மருத்துவ குழுவினர் நேற்று விசாரணை நடத்தினர்.
சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சென்னை மருத்துவ குழுவினர் விசாரணை
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 39). தொழிலாளி. இவர் கடந்த 25-ந் தேதி விபத்தில் சிக்கியதால் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர், சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு சீரங்கன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மூளைச்சாவு அடைந்தவரின் உடல், உறுப்புகளை ஆஸ்பத்திரி நிர்வாகம் தனியாருக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் வளர்மதி தலைமையிலான குழுவினர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று, மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் பிறருக்கு விற்பனை செய்யப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் நேற்று மீண்டும் 2-வது நாளாக தனியார் ஆஸ்பத்திரி மற்றும் சீரங்கன் குடும்பத்தினரிடம் சென்னையில் இருந்து 3 பேர் கொண்ட மருத்துவ குழுவினர், அதிகாரிகள் சேலம் மாவட்ட இணை இயக்குனர் வளர்மதி தலைமையில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் உடல் உறுப்புகள் விற்கப்பட்டதா என்பது குறித்து நரிப்பள்ளம் பகுதியில் உள்ள இறந்த சீரங்கன் மனைவி கனகம்மாள், மகள் ரஞ்சிதா, மகன்கள் சஞ்சய், பீரவீன்குமார் மற்றும் அவருடைய உறவினர்களிடம் மருத்துவ குழுவினர் நேரில் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் இறந்த சீரங்கனின் உடல் தானம் செய்ய தனியார் ஆஸ்பத்திரி சார்பில் வலியுறுத்தப்பட்டதா?, அதற்காக பணம் பெறப்பட்டதா?, அல்லது தானாக முன் வந்து உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறுகையில், பொதுமக்கள் நடைமுறை விதிமுறைகளுக்குட்பட்டு உடல் உறுப்பு தானம் செய்யலாம். ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உடல் உறுப்புகள் பேரம் பேசப்படுவதாக எழுந்த புகார் குறித்து, விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் தவறு செய்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com