மேகதாதுவில் புதிய அணைகட்டும் விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் அரசியல் செய்கிறார் மந்திரி டி.கே.சிவக்குமார், குற்றச்சாட்டு

மேகதாதுவில் புதிய அணைகட்டும் விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் அரசியல் செய்கிறார் என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை மந்திரி டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
மேகதாதுவில் புதிய அணைகட்டும் விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் அரசியல் செய்கிறார் மந்திரி டி.கே.சிவக்குமார், குற்றச்சாட்டு
Published on

பெங்களூரு,

காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாதுவில் புதிய அணைகட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையில், மேகதாதுவில் புதிய அணைகட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற துறைக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதி இருந்தது.

அதே நேரத்தில் மேகதாதுவில் அணைகட்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்க கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று கர்நாடக நீர்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com