துப்புரவு தொழிலாளர்கள் 14 பேர் பணி இடைநீக்கம் : மும்பை மாநகராட்சி நடவடிக்கை

வேலையில் அலட்சியமாக இருந்த துப்புரவு தொழிலாளர்கள் 14 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
துப்புரவு தொழிலாளர்கள் 14 பேர் பணி இடைநீக்கம் : மும்பை மாநகராட்சி நடவடிக்கை
Published on

மும்பை,

மும்பை மாநகராட்சி ஏ வார்டு மெரின்லைன் பகுதியில் தெருக்களை சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை என மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இந்த புகாரை தொடர்ந்து அதிகாரிகள் நேற்று முன்தினம் மெரின்லைன் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மேற்பார்வையாளர் உள்பட துப்புரவு பணியாளர்கள் 14 பேர் வருகை பதிவேட்டில் கையொப்பம் போட்டு விட்டு தெருக்களை சுத்தம் செய்யாமல் பணியில் அலட்சியமாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள், துப்புரவு பணி மேற்பார்வையாளர் உள்பட 14 பேரையும் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com