கடலூரில் கிளினிக் சூறை; டாக்டருக்கு கொலை மிரட்டல்

திருமணமாகாத இளம்பெண் 7 மாத கர்ப்பமானதை கண்டறிந்து கூறியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கடலூரில் கிளினிக்கை சூறையாடி, டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடலூரில் கிளினிக் சூறை; டாக்டருக்கு கொலை மிரட்டல்
Published on

கடலூர்,

கடலூர் கூத்தப்பாக்கம் தெய்வசிகாமணி நகரில் கிளினிக் வைத்து நடத்தி வருபவர் டாக்டர் வித்யா. இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த போது, ஆயிப்பேட்டையை சேர்ந்த திருமணமாகாத 22 வயது இளம்பெண்ணை வயிற்று வலி என்று அவரது உறவினர்கள் அழைத்து வந்தனர். அந்த இளம்பெண்ணை பரிசோதனை செய்த டாக்டர், அந்த இளம்பெண் 7 மாத கர்ப்பமாக இருந்ததை கண்டறிந்தார். இது பற்றி அந்த பெண்ணின் உறவினர்களிடம் தெரி வித்தார். இதை அறிந்ததும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார், அவரது தம்பி திருநாவுக்கரசு, நண்பர்கள் சதீஷ்குமார், வீரமணி ஆகிய 4 பேரும் கிளினிக் வந்து, திடீரென அங்கிருந்த செவிலியர் ஆனந்தியை தாக்கி, கிளினிக்கில் இருந்த நாற்காலிகளை உடைத்து சூறையாடினர். இதை தட்டிக்கேட்ட டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

4 பேர் மீது வழக்கு

இது பற்றி டாக்டர் வித்யா கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், ஆனந்தகுமார், அந்த இளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததும், அதனால் அந்த பெண் கர்ப்பமானதும் தெரிய வந்தது. இந்த உண்மையை டாக்டர் தெரிவித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஆனந்தகுமார் உள்பட 4 பேர் வந்து தகராறு செய்து விட்டு சென்றது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com