

திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நாளை(வியாழக்கிழமை) முழுநேரமும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. தவறும்பட்சத்தில் இது தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.