கல்லூரி மாணவ, மாணவிகள் மறியல்

கல்லூரி மாணவ, மாணவிகள் மறியல்
கல்லூரி மாணவ, மாணவிகள் மறியல்
Published on

உசிலம்பட்டி, மார்ச்

சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி சீர்மரபினர் உள்ளிட்ட 68 சமுதாய மக்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று கோரி உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் பயிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவ, மாணவிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வகுப்பை புறக்கணித்து மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜன் தலைமையிலான போலீசார் மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com