கோமாரி நோய் தடுப்பூசி முகாம்; 19–ந் தேதி வரை நடக்கிறது

கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்கும் வகையில் கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக ஆண்டுக்கு 2 முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோமாரி நோய் தடுப்பூசி முகாம்; 19–ந் தேதி வரை நடக்கிறது
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் இந்த ஆண்டிற்கான முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வருகிற 19ந் தேதி வரை நடைபெற உள்ளது. அனைத்து கிராமங்களிலும் இந்த தடுப்பூசி போடப்படும் நாட்களில் தங்கள் கால்நடைகளுக்கு தவறாமல் கோமாரி நோய் தடுப்பூசி போட்டு பயன்பெற கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீதம் பணி முடித்து தடுப்பூசி போடாத மாடுகளே இல்லை என்ற நிலையை உருவாக்கி கோமாரி நோயை அறவே வராமல் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். எனவே விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கால்நடைகள் மூலமாக ஏற்படும் பொருளாதார இழப்பை தடுத்திட தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com