கள்ளக்காதலி வீட்டில் துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் கால்வாய் கரை பகுதியை சேர்ந்தவர் ஜடாராஜா (வயது 23).
கள்ளக்காதலி வீட்டில் துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

இவர், சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலம் சர்மா நகர் 36-வது வார்டில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கும், கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் கொடுங்கையூரைச் சேர்ந்த 36 வயதான துப்புரவு பெண் தொழிலாளிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஜடாராஜா அடிக்கடி தனது கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் கள்ளக்காதலி வீட்டுக்கு சென்ற ஜடாராஜா, அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com