

சென்னை,
இவர் 80 கிலோ எடை பிரிவில் முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். சென்னையில் கடந்த 9-ந் தேதி நடைபெற்ற மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டியிலும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
சென்னை போலீஸ்துறைக்கு பெருமை சேர்ந்த போலீஸ்காரர் புருஷோத்தமனை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். அவருக்கு வெகுமதியும் வழங்கினார்.
ராசிபுரத்தில் அடுத்த மாதம் 7-ந் தேதி நடைபெற உள்ள அகில இந்திய ஆணழகன் போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்று கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வாழ்த்தினார்.
போலீஸ்காரர் புருஷோத்தமன் 7 முறை மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.