மின்வாரியம் தனியார் மயமாக்குவதை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மின்வாரியம் தனியார் மயமாக்குவதை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்வாரியம் தனியார் மயமாக்குவதை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

தென்காசி,

மின்வாரியம் தனியார் மயமாக்குவதை கண்டித்து தென்காசியில் தொழிற் சங்கத்தினர் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்ட துணை செயலாளர் அயூப்கான் தலைமை தாங்கினார்.

தொழிலாளர் முன்னேற்ற சங்க கோட்ட செயலாளர் பெத்தேல் ராஜ், சம்மேளன கோட்ட செயலாளர் முருகன், டாக்டர் அம்பேத்கர் பணியாளர் மற்றும் பொறியாளர் சங்க மாநில இணைச் செயலாளர் அப்துல் காதர் மற்றும் தொழிற்சங்கத்தை சேர்ந்த மாரிமுத்து, டேவிட், முத்துப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com