

பெங்களூரு,
மாநிலத்தில் காலியாக உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகள், 2 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் 3 நாடாளுமன்ற தொகுதிகளில், எந்த தொகுதியை ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு விட்டு கொடுக்கலாம் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளிலும் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதுபற்றி காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மந்திரிசபை விரிவாக்கத்தில் மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள்.