குடிசை மாற்று வாரிய கட்டுமான பணியால் வீடுகளில் விரிசல் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

மணலி புதுநகரில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ராட்சத எந்திரங்களால் ஆழ்துளை பள்ளம் எடுப்பதால் அருகே உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. இதனை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிசை மாற்று வாரிய கட்டுமான பணியால் வீடுகளில் விரிசல் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
Published on

மீஞ்சூர்,

மீஞ்சூர் அருகே மணலி புதுநகரில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூலம் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1980-ம் ஆண்டு முதல் தற்போது வரை நிலங்களை கையகப்படுத்தி குடியிருப்பு மனைகளில் வீடுகள் கட்டி விற்பனை செய்யப்படுகிறது. மணலி புதுநகர் பஸ் நிலையத்திற்கு அருகே இருந்த நிலத்தை கடந்த 1994-ம் ஆண்டு கையகப்படுத்தி குடிசை மாற்று வாரியத்திற்கு நலிவுற்ற பிரிவினருக்காக வீடு கட்டும் திட்டத்திற்காக இட உரிமை மாற்றம் செய்யப்பட்டது.

இதனையடுத்து குடிசை மாற்று வாரியம், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியை தொடங்க டெண்டர் விடப்பட்டு தனியார் கட்டுமான நிறுவனத்தினர் பணிகளை தொடங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com