

சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 11 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 18 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 8 பேர், எடப்பாடி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், ஓமலூர், கெங்கவல்லி, சேலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதி, பனமரத்துப்பட்டி, தலைவாசல், மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 866 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 6 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 87 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.