நாமக்கல் மாவட்டத்தில், 2 நாட்களில் கொரோனாவுக்கு 6 பேர் பலி சாவு எண்ணிக்கை 451 ஆக அதிகரிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் கொரோனாவுக்கு 6 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கொரோனாவுக்கு இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 451 ஆக அதிகரித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், 2 நாட்களில் கொரோனாவுக்கு 6 பேர் பலி சாவு எண்ணிக்கை 451 ஆக அதிகரிப்பு
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 448 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாமக்கல், திருச்செங்கோடு, வெப்படை பகுதிகளை சேர்ந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 451 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 47 ஆயிரத்து 206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நேற்று ஒரே நாளில் புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,264 ஆக அதிகரித்து உள்ளது.

595 பேருக்கு சிகிச்சை

இந்த நிலையில் நேற்று 53 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 46 ஆயிரத்து 218 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 595 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் சற்று அதிகரித்து உள்ள நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் கொரோனாவுக்கு 6 பேர் இறந்து விட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

====

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com