கர்நாடகத்தில் புதிதாக 1,708 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 1,708 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் புதிதாக 1,708 பேருக்கு கொரோனா
Published on

பெங்களூரு:

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

36 பேர் உயிரிழந்தனர்

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 56 ஆயிரத்து 564 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,708 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதனால் மாநிலத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 லட்சத்து 83 ஆயிரத்து 947 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 36 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 157 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 291 ஆக குறைந்துள்ளது. ஒரே நாளில் 2,463 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 18 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது.

சிக்கமகளூருவில் 105 பேர்

அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 386 பேர், தட்சிண கன்னடாவில் 241 பேர், ஹாசனில் 158 பேர், மைசூருவில் 210 பேர், சிக்கமகளூருவில் 105 பேர், ஹாசனில் 121 பேர், உடுப்பியில் 105 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 23 மாவட்டங்களில் கொரானா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 9 பேரும், தட்சிண கன்னடாவில் 6 பேரும், மைசூருவில் 4 பேரும் என மொத்தம் 36 பேர் உயிரிழந்தனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com