கர்நாடகத்தில் புதிதாக 1,990 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 1,990 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் புதிதாக 1,990 பேருக்கு கொரோனா
Published on

பெங்களூரு:

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

குணம் அடைந்தவர்கள்

கர்நாடகத்தில் நேற்ற 1 லட்சத்து 24 ஆயிரத்து 494 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,990 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதனால் மாநிலத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 லட்சத்து 76 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 45 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 989 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 642 ஆக குறைந்துள்ளது. ஒரே நாளில் 2,537 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 6 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளது.

25 மாவட்டங்களில்...

புதிதாக பெங்களூரு நகரில் 400 பேர், பெலகாவியில் 140 பேர், ஹாசனில் 175 பேர், மைசூருவில் 211 பேர் உடுப்பியில் 120 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 25 மாவட்டங்களில் கொரானா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. யாதகிரியில் புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பாகல்கோட்டை, பீதர், சித்ரதுர்கா, ராய்ச்சூர் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிப்பு 5-க்கும் கீழ் குறைந்துள்ளது.

கொரோனாவுக்கு பெங்களூருவில் 8 பேரும், தட்சிண கன்னடாவில் 6 பேரும், பெலகாவியில் 4 பேரும் என மொத்தம் 45 பேர் உயிரிழந்தனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com