விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

விருதுநகர்,

மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,573 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 16,309 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 25 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தபடவில்லை. மாவட்ட சுகாதாரத் துறையினர் நேற்று மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை மற்றும் முடிவுகள் குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. மாவட்டத்தில் இதுவரை நோய் பாதிப்புக்கு 231 பேர் உயிரிழந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com