

செங்குன்றம்,
பொன்னேரி அடுத்த சோழவரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 8 போலீஸ்காரர்களுக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து சோழவரம் போலீஸ் நிலையம் 3-வது முறையாக மூடப்பட்டது. ஒரக்காடு சந்திப்பில் உள்ள அரசு ஒன்றிய ஆரம்பப் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக போலீஸ் நிலையம் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.