அரியலூர், பெரம்பலூரில் 14 பேருக்கு கொரோனா தொற்று

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று மொத்தம் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர், பெரம்பலூரில் 14 பேருக்கு கொரோனா தொற்று
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் தலா ஒருவருக்கும், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 2 பேருக்கும் என மொத்தம் 7 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,302 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு தற்போது 637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 3,619 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 488 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய வட்டாரங்களில் தலா 2 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் ஒருவரும் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,096 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் ஏற்கனவே 20 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 1,989 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், தற்போது 87 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 400 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com