மதுராந்தகம் அரசினர் உயர்நிலை பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஜமீன் எண்டத்தூர் அரசினர் உயர்நிலை பள்ளியில் மாபெரும் தடுப்பூசி முகாம் மதுராந்தகம் ஒன்றிய குழு தலைவர் கீதா கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.
மதுராந்தகம் அரசினர் உயர்நிலை பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம்
Published on

ஒன்றிய குழு துணைத்தலைவர் குமரவேல் அப்பாதுரை, ஒன்றிய கவுன்சிலர் ஜானகி தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசிகளை போட்டு கொண்டனர்.

ஜமீன் எண்டத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஷகிலா பூபாலன், கிராம நிர்வாக அலுவலர் தர்மலிங்கம், ஊராட்சி செயலர் பெரியசாமி மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com