18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் 21-ந்தேதி நடக்கிறது: திருவள்ளூர் கலெக்டர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் 21-ந்தேதி நடக்கிறது: திருவள்ளூர் கலெக்டர்
Published on

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனவே அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை மற்றும் இதர வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு தடுப்பூசி போடும் முகாம் முதற்கட்டமாக மாற்றுத்திறனாளிகளுக்கு திருவள்ளூர் ஈக்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வருகின்ற 21-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடக்க உள்ளது.

எனவே 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசியினை ஆதார் அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் சென்று செலுத்திக்கொள்ளலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com