கத்தியால் வெட்டி நகை பறித்த கொள்ளையனுடன் போராடிய பெண்

பெண்ணை கத்தியால் வெட்டி நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை, பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கத்தியால் வெட்டி நகை பறித்த கொள்ளையனுடன் போராடிய பெண்
Published on

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 55). இவருடைய மனைவி தனலட்சுமி (46). சினிமாத்துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனலட்சுமி, வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, தரையில் விழுந்த சங்கிலியின் ஒரு பகுதியை எடுத்துவிட்டார். உடனே கொள்ளையன் தன்னிடம் இருந்த கத்தியை காட்டி மிரட்டி தனலட்சுமியிடம் இருந்த மீதி சங்கிலியையும் கேட்டு மிரட்டினான்.

X

Daily Thanthi
www.dailythanthi.com