விழுப்புரம், மதுபோதையில் குடிநீர் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த பூ வியாபாரி சாவு

மதுபோதையில் குடிநீர் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த பூ வியாபாரி இறந்தார்.
விழுப்புரம், மதுபோதையில் குடிநீர் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த பூ வியாபாரி சாவு
Published on

விழுப்புரம்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா தட்டாம்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 45). இவர் விழுப்புரம் காந்தி சிலை அருகில் கடந்த 25 ஆண்டுகளாக பூ வியாபாரம் செய்து வந்தார்.

இவர் மது அருந்தும் பழக்கம் உடையவர். சம்பவத்தன்று, தான் வியாபாரம் செய்து வரும் இடத்தில் மதுபோதையில் இருந்த அவர், குடிநீர் என நினைத்து அருகில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார்.

இதில் மயங்கியபடி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com