குடும்ப தகராறில் தீக்குளித்த பெண் சாவு; ஆர்.டி.ஓ. விசாரணை

குடும்ப தகராறில் தீக்குளித்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
குடும்ப தகராறில் தீக்குளித்த பெண் சாவு; ஆர்.டி.ஓ. விசாரணை
Published on

பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஜனகராஜ் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 27). தொழிலாளி. இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே தலங்கை கிராமத்தை சேர்ந்த ஊர்வசி (22) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது.இவர்களுக்கு தருண் குமார் (4) என்ற மகனும், யோஷிதா (2) என்ற மகளும் உள்ளனர். அருண்குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்த நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனவேதனை அடைந்த ஊர்வசி தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்பு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஊர்வசி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை மாதவன் ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உஷாவிற்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் அவரது மரணம் குறித்து திருத்தணி ஆர்.டி.ஓ.சத்யா விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com