மன விரக்தியில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய தொழிலாளி சாவு

மன விரக்தியில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
மன விரக்தியில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய தொழிலாளி சாவு
Published on

திருவள்ளூர் முகமது அலி தெருவில் வசித்து வந்தவர் சரவணன் (வயது 35). கூலி தொழிலாளி. திருமணம் ஆகாத இவர் தனது தாயாருடன் வசித்து வந்தார். மது அருந்தும் பழக்கம் கொண்ட சரவணன் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து உள்ளார். இதனால் கோபம் கொண்ட அவரது தாயார் அவரிடம் சண்டை போட்டு விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டுப் வெளியேறி தனியாக சென்று விட்டார்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சரவணன் மன விரக்தியில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக தெரிகிறது. இதனால் அவர் பரிதாபமாக இறந்து போனார். இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவள்ளூர் டவுன் போலீசில் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அழுகிய நிலையில் கிடந்த சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com