2-வது மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர்கள் செல்வம்(வயது 40) மற்றும் ஜான்(32). கூலி தொழிலாளர்களான இவர்கள் இருவரும் நேற்று வில்லிவாக்கம் சிட்கோ நகர் 50-வது தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டின் 2-வது மாடியில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
2-வது மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு
Published on

இதற்காக சாரம் அமைத்து அதில் நின்றபடி பெயிண்ட் அடித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென சாரம் சரிந்து விழுந்தது. இதனால் செல்வம், ஜான் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த செல்வம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய ஜான், சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com