2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் வாகனங்களுக்கு இருக்கைகள் தயாரிக்கும் தொழில் செய்து வந்தவர் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.
2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
Published on

சென்னை மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கோவிந்தன்(வயது 60). வாகனங்களுக்கு இருக்கைகள் தயாரிக்கும் தொழில் செய்து வந்த இவர், தனது மனைவியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு கோவிந்தன், தனது வீட்டின் 2-வது மாடியில் நின்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை சைதாப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கோவிந்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து குமரன்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com