கோரிக்கைகளை வலியுறுத்தி மராட்டிய அரசு ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்தம்

கோரிக்கைகளை வலியுறுத்தி மராட்டிய அரசு ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி மராட்டிய அரசு ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்தம்
Published on

மும்பை,

7-வது ஊதிய கமிஷன் பரிந்துரை அடிப்படையில் சம்பள உயர்வு வழங்க வேண்டும். ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 60-ஆக உயர்த்த வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் பணி, 1 லட்சத்து 80 ஆயிரம் பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக அரசு பணிகள் பாதிக்க உள்ளது.

இதுகுறித்து மராட்டிய அரசு ஊழியர்கள் அமைப்பின் தலைவர் மிலிந்த் சர்தேஷ்முக் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களது போராட்ட அறிவிப்பை தொடர்ந்து 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரை அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதி அளித்தார். இதேபோல மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

இதை வலியுறுத்தி எங்களது வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும். இந்த வேலைநிறுத்தத்தில் 17 லட்சம் அரசு ஊழியர்கள் இடம்பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com