100 நாள் வேலைக்கான ஊதியம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலைக்கான ஊதியம் வழங்காததை கண்டித்தும், அதில் நடைபெறும் ஊழலை கண்டித்தும் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
100 நாள் வேலைக்கான ஊதியம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Published on

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய வளையம் கிராமத்தில் நடை பெறும் 100 நாள் வேலைக் கான ஊதியம் வழங்காததை கண்டித்தும், அதில் நடைபெறும் ஊழலை கண்டித்தும் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயி கவியரசன் தலைமை தாங்கினார். விவசாயி மகாராஜன் வரவேற்றார். தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மகாராசன் கண்டன உரையாற்றினார். இதில் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com