மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வந்தவாசியில் மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

வந்தவாசி,

வந்தவாசி மின்வாரிய கோட்ட செயற் பொறியாளரின் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்தும், அவரை இடமாறுதல் செய்ய வலியுறுத்தியும் வந்தவாசி செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார். கோவிந்தராஜ், ராஜசேகர், ஆர்.ரவி, மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட செயலாளர் எஸ்.ரவி வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாநில செயலாளர் காங்கேயன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கண்ணன், ஜெ.அருள்தாஸ், வட்ட துணைத் தலைவர் ஆனந்தன், வட்ட பொருளாளர் பாலாஜி மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com