டெங்கு கொசு உற்பத்தி 3 தனியார் நிறுவனங்களுக்கு அபராதம்

டெங்கு கொசு உற்பத்தி கண்டறியப்பட்டதால் காஞ்சீபுரம் அருகே 3 தனியார் நிறுவனங்களுக்கு கலெக்டர் பொன்னையா ரூ.3 லட்சம் அபராதம் விதித்தார்.
டெங்கு கொசு உற்பத்தி 3 தனியார் நிறுவனங்களுக்கு அபராதம்
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில், டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க பல்வேறு நிறுவனங்களில் கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதையொட்டி, காஞ்சீ புரத்தை அடுத்த கீழம்பி ஊராட்சிக்குட்பட்ட ஒரு தனியார் நிறுவனத்துக்கும், திம்மசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு தனியார் பால் நிறுவனத்திற்கும், மேலும் ஒரு தனியார் நிறுவனத்தில் கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு டெங்கு கொசு உற்பத்தியாவதை கண்டறிந்தார். முதல் முறை என்பதால், அந்த 3 தனியார் நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு தலா ரூ.1 லட்சம் என ரூ.3 லட்சம் அபராதம் விதித்தார்.

அடுத்த ஆய்வின் போது டெங்கு கொசு உற்பத்தி கண்டறியப்பட்டால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், மேற்படி நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com