பீகார் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற நிதிஷ்குமாருக்கு தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்து

பீகார் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்ட நிதிஷ்குமாருக்கு, தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்து கூறியுள்ளார்.
பீகார் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற நிதிஷ்குமாருக்கு தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்து
Published on

மும்பை,

பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. பா.ஜனதா, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை விட அதிக இடங்களை கைப்பற்றியது. எனினும் முதல்-மந்திரி பதவியை அவருக்கு விட்டு கொடுத்தது. இதில் நேற்று முன்தினம் பீகார் முதல்-மந்திரியாக தொடர்ந்து 4-வது முறையாக நிதிஷ் குமார் பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் பா.ஜனதாவை சேர்ந்த தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியார் துணை முதல்-மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

பட்னாவிஸ் வாழ்த்து

இந்தநிலையில் பீகார் சட்டசபை தேர்தலில், பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றி மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் நிதிஷ்குமாருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:-

பீகார் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்ட நிதிஷ்குமாருக்கு வாழ்த்துகள். மேலும் துணை முதல்-மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்ட தர்கிஷோர் பிரசாத், ரோணு தேவி ஆகியோருக்கும் வாழ்த்துகள். உங்களுக்கும், உங்கள் ஒட்டுமொத்த அணிக்கும் ஆட்சிகாலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com