திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

கிருத்திகை, சஷ்டி மற்றும் செவ்வாய்க்கிழமையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Published on

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆடிகிருத்திகை, தைப்பூசம், மற்றும் கிருத்திகை நாட்களில் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று கிருத்திகை, சஷ்டி மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய மூன்றும் முருகபெருமானுக்கு உகந்த தினம் என்பதால் அண்டை மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதன் காரணமாக எப்போதும் இல்லாத அளவில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மலைக்கோவில் அடிவாரத்தில் அளவுக்கு அதிகமான வாகனங்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால், பொதுவழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து முருக பெருமானை தரிசித்தனர். அதே போல் ரூ.100 மற்றும் ரூ.150 சிறப்பு தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com