தர்மபுரி லாரி டிரைவருக்கு கொரோனா தொற்று இல்லை: பரிசோதனையில் உறுதியானது

தர்மபுரி லாரி டிரைவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியானது.
தர்மபுரி லாரி டிரைவருக்கு கொரோனா தொற்று இல்லை: பரிசோதனையில் உறுதியானது
Published on

ஊத்தங்கரை,

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எலவடை கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்த தர்மபுரி மாவட்டம் நரிப்பள்ளியைச் சேர்ந்த மற்றொரு லாரி டிரைவர் மாயமானார். அவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா தானிப்பாடியில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சளி உள்ளிட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு நேற்று முன்தினம் இரவு வந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது கூறியதாவது:-

ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள லாரி டிரைவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. ஆனாலும் அவர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com