பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு; 6 பேர் மீது வழக்கு

குளித்தலை அருகே பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறு தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு; 6 பேர் மீது வழக்கு
Published on

குளித்தலை,

தகராறு

குளித்தலை அருகே உள்ள கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் தேக்கன் (வயது 60). இவர் குளித்தலை அருகே உள்ள நடுபட்டியை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் வாங்கி அதை கணேசபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை தேக்கன் திருப்பி கேட்டபோது, ஆனந்த் தான் பணம் வாங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நடந்த தகராறில் ஆனந்த் அவரது மனைவி நதியா மற்றும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து தேக்கனை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தேக்கன் அளித்த புகாரின் பேரில் ஆனந்த், நதியா, கோவிந்தராஜ் ஆகிய 3 பேர் மீதும் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

6 பேர் மீது வழக்கு

இதேபோல் குளித்தலை அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்த கண்ணன், அவரது மகன் கார்த்திக் மற்றும் தேக்கன் ஆகிய 3 பேரும் ஆனந்த் மற்றும் நதியாவை தாக்கியதோடு அவர்களது ஓட்டலில் இருந்த உணவு பொருட்களை சேதப்படுத்தியதாக நதியா போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கண்ணன், கார்த்திக் மற்றும் தேக்கன் ஆகிய 3 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com